கேரளாவிற்கு அரபு எமிரேட்ஸ் 700 கோடி தருவதாக பினராயி விஜயனுக்கு கூறியது யார்? பாஜக கேள்வி
டெல்லி: கேரளாவிற்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரூ.700 கோடி உதவி வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியது ஏன் என்று அம்மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கேள்வி எழுப்பினார்.
கோழிக்கோட்டில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: கேரள வெள்ள நிவாரண நிதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 100 மில்லியன் டாலர் வழங்க முன் வந்துள்ளதாக, (இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி) முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.

ஆனால், அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் மறுத்துள்ளார். எனவே, இப்படி ஒரு அறிவிப்பு வெளியானதாக பினராயி விஜயனுக்கு எங்கேயிருந்து தகவல் கிடைத்தது என்பதை தெரிவிக்க வேண்டும்.
அறிவிக்கப்படாத பணத்தை தடுப்பதாக மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இது தேவையற்ற செயல். கேரளாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி முழு ஈடுபாட்டுடன் உள்ளார். இவ்வாறு ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications