ஜெயலலிதா இருக்கும் சிறையில் ஜனார்தனன் ரெட்டி, தெல்கி, 'சைகோ' ஜெய்சங்கர், மதானி!!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதா இருக்கும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் யார், யார் இருக்கிறார்கள் என்று தெரியுமா?

ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சிறையில் யார், யார் எல்லாம் இருக்கிறார்கள் என பார்ப்போம்,

ஜனார்தனன் ரெட்டி

ஜனார்தனன் ரெட்டி

சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி பரப்பன அக்ரஹாரா சிறையில் தான் உள்ளார். இவர் சிறையில் ஜெயலலிதாவை சந்திக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளாராம். அனுமதி கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அப்துல் கரீம் தெல்கி

அப்துல் கரீம் தெல்கி

முத்திரை தாள் மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்துல் கரீம் தெல்கியும் பரப்பன அக்ரஹாராவாசி தான்.

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

பல்வேறு கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சைக்கோ ஜெயசங்கரும் பரப்பன அக்ரஹாராவில் தான் உள்ளான்.

மதானி

மதானி

2008ம் ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானியும் பரப்பன அக்ரஹாராவில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+