முதல்முறை எம்எல்ஏவாக தேர்வான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல்வர்! வசுந்தரா ராஜேவுக்கு பாஜக கல்தா!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவான அவர் உடனடியாக முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் பஜன்லால் சர்மா யார்? அவரது பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க 101 தொகுதிகளில் வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்த நிலையில் அசோக் கெலாட் முதல்வராக இருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியின் வேட்பாளர் இறந்ததால் 199 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் பாஜக மொத்தம் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர்களான அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், எம்எல்ஏ பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் தான் இன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் வசுந்தர ராஜே சிந்தியா ஓரம்கட்டப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ராஜஸ்தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மா யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது பஜன்லால் சர்மா பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் தேர்தல் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். மாறாக கட்சி பொறுப்புகள் மூலம் மாநிலத்தில் கட்சியை தொடர்ந்து பலப்படுத்தி வந்தார். 56 வயது நிரம்பிய பஜன்லால் சர்மா பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக 4 முறை பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
நடந்து முடிந்த தேர்தலில் சங்கானீர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். இதன்மூலம் அவர் முதல் முறையாக எம்எல்ஏவான நிலையில் அவருக்கு முதல்வர் பதவி என்பது கிடைத்துள்ளது. இவர் மீது கட்சி மேலிட தலைவர்கள் நம்பிக்கை அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தான் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் முதுகலை படிப்பை முடித்துள்ளார். தனது தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தனக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், ஆண்டு வருமானம் என்பது 11.1 லட்சமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications