4 பேரில் தனி ஒருவனாக திகழ்ந்து முதல்வராக தேர்வு.. யார் இந்த பூபேஷ் பாகல்?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. இக்கட்சியின் சார்பில் சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நக்ஸல் ஆதிக்கம் நிலவி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அதிக தொகுதிகளை பெற்றது. இந்த மாநிலத்தின் முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.

அதன் பேரில் முதல்வர் ரேசில் 4 பேர் இருந்தனர். அவர்களுள் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல், அம்பிகாபூர் எம்பி டிஎஸ் சிங் தேவ், கட்சியின் ஓபிசி பிரிவின் தலைவர் தம்ரத்வாஜ் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரதாஸ் மஹந்த் ஆகியோர் ஆவர்.
இவர்கள் 4 பேரில் சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டார். இவர் அந்த மாநிலத்தின் 3-ஆவது முதல்வர் ஆவார். இவர் பதான் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் ஆன்மிக குரு சுவாமி ஆத்மானந்தாவின் உறவினர் ஆவார். இவர் தனது அரசியல் குருவான மறைந்த சந்துலால் சந்த்ராகரின் வழிகாட்டுதல்படி கடந்த 80 களில் அரசியலுக்கு வந்தார்.
1993 மற்றும் 1998-இல் ம.பி.யின் பதான் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். திக் விஜய் சிங்கின் அமைச்சரவையில் மாநில அமைச்சராக பொறுப்பேற்றார். சத்தீஸ்கர் மாநிலம் உருவான பிறகு வருவாய், பொது சுகாதாரம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான அமைச்சராக பாகல் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராவார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications