நீண்ட நிர்வாக அனுபவம்.. காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் முதல் துணை நிலை ஆளுநர்கள் பின்னணி!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் லெப்டினன்ட்-கவர்னராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டன. அக்டோபர் 31 ம் தேதி முதல், காஷ்மீர் தனி யூனியன் பிரதேசமாகவும், லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் குடியரசு தலைவர், அவ்விரு யூனியன் பிரதேசங்களுக்கும் துணை நிலை ஆளுநர்களை நியமித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிஷ் சந்திரா 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும். கிரிஷ் சந்திரா முர்மு தற்போது நிதி அமைச்சகத்தில் செலவீனச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அவரின் முதன்மை செயலாளராக பதவி வகித்தவர், கிரிஷ் சந்திரா. குஜராத்தில் முக்கிய நிர்வாக பதவிகள் பலவற்றை வகித்தவர். எனவே, பிரதமரின் நெருங்கிய நம்பிக்கையாளராகக் கருதப்படுகிறார்.
இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) மற்றும் இந்திய காவல்துறை சேவை (ஐ.பி.எஸ்), மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் (ஏ.சி.பி) போன்ற அகில இந்திய சேவைகள் துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில்தான் இருக்குமே தவிர காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரசின் கீழ் அத்துறைகள் வராது.
ராதா கிருஷ்ணா மாத்தூர் திரிபுரா மாநில 1977 ஐ.ஏ.எஸ் கேடர் அதிகாரி ஆவார். ராதா கிருஷ்ணா மாத்தூர், நாட்டின் தலைமை தகவல் ஆணையராக (சிஐசி) பணியாற்றி, 2018 நவம்பரில் ஓய்வு பெற்றார்.
ராதா கிருஷ்ணா மாத்தூர் இந்திய பாதுகாப்பு, மத்திய, சிறு மற்றும் நடுத்தர நிறுவன செயலாளராகவும், திரிபுராவின் தலைமை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஜவுளி அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையராகவும், மத்திய அரசில் ஜவுளி அமைச்சகத்தின் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மத்திய அரசைத் தவிர, ஐ.ஏ.எஸ் அதிகாரி திரிபுரா அரசாங்கங்களுக்கு திரிபுராவின் தலைமைச் செயலாளராகவும், நிதி முதன்மை செயலாளராகவும், வேளாண் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ராதாகிருஷ்ணா மாத்தூர் 2003 டிசம்பரில் திரிபுராவின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக (சி.ஐ.சி) அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. வரும் 31ம் தேதி 2 யூனியன் பிரதேசங்கள் உதயமாகும் நாளிலேயே, துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஆளுநராக பதவி வகித்த சத்யபால் மாலிக், கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications