ஒடிசா ரயில் விபத்திற்கும் அரியலூருக்கும் என்னங்க சம்பந்தம்? திடீரென அந்த ஊர் டிரெண்டாவது ஏன்? காரணம்
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு இடையில் தற்போது திடீரென அரியலூர் பெயர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் இந்த வார்த்தை டிரெண்ட் ஆவதற்கு பின் முக்கிய காரணங்கள் உள்ளன.
இந்திய வரலாற்றில் நடந்த பெரிய ரயில் விபத்துக்களையும் அரியலூர் இரயில் விபத்து முக்கியமானது ஆகும். மொத்த இந்திய நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விபத்தாகும் இது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இந்த கொடிய விபத்து ஏற்பட்டது.

சென்னையிலிருந்து 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி சென்ற ரயில் விபத்தில் சிக்கியது. விருத்தாச்சலம் சந்திப்பில், சேலம் செல்லும் பெட்டி ஒன்றைத் தவிர்த்து 12 பெட்டிகள் தூத்துக்குடி நோக்கி செல்ல, அரியலூர் அருகே விபத்து ஏற்பட்டது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அரியலூர் - கல்லகம் இரயில் நிலையங்களுக்கிடையே விபத்து நிகழ்ந்தது. மழை காரணமாக அங்கே வெள்ளம் ஏற்பட்டு இருந்தது. இதனால் தண்டவாளம் தெரியவில்லை. அதுவும் நீராவி எஞ்சின் ரயில். அதிகாலை 5.30 மணி என்பதால் ஓட்டுனருக்கு எதுவும் தெரியவில்லை.
முக்கியமாக தண்ணீரின் அளவுபற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு எதுவும் தெரியாத நிலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 250 பேர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தின் காரணமாக இந்தியாவே குலுங்கியது. அதன்பின் ரயில் பயண பாதுகாப்பு விதிகள் மாற்றப்பட்டது.
முக்கியமாக அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை விட்டு விலகினார். இந்த நிலையில்தான் அந்த அரியலூர் விபத்தை விட இந்த ஒடிசா விபத்து மோசமாக இருக்கலாம், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலி எண்ணிக்கையும் அதை தாண்டும் ஆபத்து உள்ளது.
இதனால் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி அரியலூர் விபத்தை எடுத்துக்காட்டி பேசி வருகின்றனர். இதனால் அந்த வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் 50 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பலி எண்ணிக்கை 90 ஐ தாண்டலாம் என்று கூறப்படுகிறது. 300 பேர் வரை காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
விபத்து: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதன் 10-12 பெட்டிகள் ஒடிசாவில் உள்ள பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
இந்த தகவல் காட்டு பகுதி என்பதால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. போன் மூலமும்,யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த பாதையில் செல்லும் ரயில்கள் எதையும் தடுக்க முடியவில்லை.
1956 :: Resignation Letter of Railway Minister Shri Lal Bahadur Shastri After Ariyalur Train Accident
— indianhistorypics (@IndiaHistorypic) June 2, 2023
( Photo - PM Museum ) pic.twitter.com/LuNGxDa88G
இந்த நேரத்தில்தான் சிறிது நேரம் கழித்து, பெங்களூர் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அருகில் இருந்த தடத்தில் வந்துள்ளது. அந்த தடத்தில் இருந்த தடம் புரண்ட பெட்டிகள் மீது பெங்களூர் ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன.












Click it and Unblock the Notifications