ஜெ. பெங்களூரில் இருப்பதை விரும்பாத கர்நாடக அரசு... பவானிசிங் பல்டிக்கு இதுவும் ஒரு காரணம்!
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கர்நாடக சிறையில் தொடர்ந்து இருப்பதை கர்நாடக அரசு விரும்பவில்லை. அவர் இருக்கும் வரை இரு மாநிலங்களுக்கு இடையே தேவையில்லாத பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை உணர்ந்தே அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை அந்த மாநில அரசு பல்டி அடிக்க வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பெங்களூரில் பெரும் பதட்டமாகவே இருந்தது. பெங்களூர் சிறைக்குப் படையெடுத்து வந்த அதிமுகவினரை சமாளிக்க முடியாமல் கர்நாடக போலீஸார் திணறினர். மேலும் பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் எழுந்தது.

அதை விட முக்கியமாக சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா மீது தூசு விழுந்தாலும் கூட அது விரும்பத்தகாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை.
இதை விட முக்கியமாக கடந்த சில நாட்களாக ஜெயலலிதாவை கைதை வைத்து கன்னடர்கள் சிலர் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் கேலி கிண்டல்களில் இறங்கினர். பதிலுக்கு கன்னடர்களை மிரட்டும் வகையில் தமிழகத்தில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டுவது உள்ளிட்ட செயல்களில் இறங்கினர்.
இதனால் ஜெயலலிதா விவகாரத்தை வைத்து இரு மாநில மக்களிடையே பெரும் கலவரம் வெடித்து விடுமோ என்ற சூழல் ஏற்பட்டது. இது இரு மாநிலங்களிலும் வாழும் தமிழர் மற்றும் கன்னடர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியது.
மேலும் கர்நாடக சிறையில் ஜெயலலிதா தொடர வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவும் மாநில அரசை வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையாவும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில்தான் இன்று காலை ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் பிற்பகலில் அந்த நிலையை மாற்றிக் கொண்டார். இதற்கு கர்நாடக அரசின் தலையீடே காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவை தொடர்ந்து கர்நாடகத்தில் வைத்துக் கொள்ள விரும்பாமல் பவானி சிங்கிடம் இறங்கிப் போகுமாறு கர்நாடக அரசே கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications