இதற்கும் வாய்ப்புண்டு.. பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்தாமல் போகலாம்... ஏன் தெரியுமா?
பாஜக முன்கூட்டியே லோக்சபா தேர்தலை நடத்தாமலும் போகலாம் என்பதற்கும் காரணங்கள் உண்டு.
டெல்லி: லோக்சபா தேர்தலை பாஜக முன்கூட்டியே நடத்துமா? நடத்தாதா? என்கிற பட்டிமன்றம் டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்களது செல்வாக்கு சரிந்து கொண்டே போவதால் திடீர் தேர்தலை நடத்தி மாநில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைப்பது என்பதுதான் பாஜகவின் வியூகம். இதற்கேற்ப அரசியல் நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.
ஆனால் தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தலை பாஜக திடீரென நடத்த வாய்ப்பே இல்லை.. இன்னும் அரசியல் களமும் சரி... சூழ்நிலைகளும் பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

வறுமையே வெளியேறு
1967-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்று இந்திரா காந்தி பிரதமரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இந்திராவுக்கு எதிராக காமராஜர், மொரார்ஜிதேசாய் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரஸை உருவாக்கினர். இதனால் 1971-ம் ஆண்டு அதாவது ஓராண்டுக்கு முன்னரே 'வறுமையே வெளியேறு- ஹரீபி கட்டாவ்' என்ற முழக்கத்துடன் இந்திரா தேர்தலை சந்தித்து வென்றார். இத்தேர்தலில் இந்திரா வெற்றி செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்க நாடு எமர்ஜென்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்தியா ஒளிர்கிறது
2004-ம் ஆண்டு வாஜ்பாய் அரசும் முன்கூட்டியே லோக்சபா தேர்தலை சந்தித்தது. அப்போது இந்தியா ஒளிர்கிறது என்ற முழக்கத்தை முன்வைத்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. இப்போது அதேபோல 2022-ல் புதிய இந்தியா என்ற முழக்கத்தை பாஜக முன்வைக்கிறது. ஆனால் 2004- தேர்தல் முடிவுகளைப் போல அமைந்துவிடுமோ என்கிற அச்சம் பாஜகவுக்கு இருக்கிறதாம்.

விவசாயிகள் கொந்தளிப்பு
நாட்டின் 340 லோக்சபா தொகுதிகள் கிராமப்புறங்களில்தான் உள்ளன. இதுவரை மத்திய பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நகர்ப்புற நடுத்தர வர்க்கம் சார்ந்தவை. அதேநேரத்தில் விவசாயிகள் வாழ்வை தொலைத்துவிட்டனர். விளைபொருட்களுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என்பது போன்ற எண்ணற்ற போராட்டங்களால் கிராமப்புறங்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறது. இதனை சமாளிக்க புதிய திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பாஜக.

வியூகம் உடனடி தேவை
அண்மையில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநில உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் சரி குஜராத் தேர்தல் முடிவுகளும் பாஜகவை பெரும் பீதி அடைய வைத்துள்ளன. இதனால் அதிருப்தியை சமாளிக்கும் வகையில் வியூகங்களை வகுக்க வேண்டிய சிக்கலில் இருக்கிறது பாஜக. இதனால் உடனடியாக தேர்தலை சந்திக்காது பாஜக எனவும் கூறப்படுகிறது.

அவகாசம் தேவை
இப்போதுதான் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கிறார். அவர்களை களமிறக்கி ஆதாயம் தேடுவதற்கு பாஜகவுக்கு அவகாசம் தேவை என்பதாலும் உடனடி தேர்தலுக்கு சாத்தியம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
-
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!












Click it and Unblock the Notifications