கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரின் சட்டையை பிடித்து இழுத்து திட்டிய ஜெயா பச்சன்
மும்பை: நடிகர் அமிதாப் பச்சனின் உடல் நிலை குறித்த வதந்தி பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்ட ஜெயா பச்சன் அவரது சட்டை காலரை பிடித்து இழுத்தார்.
நடிகர் அமிதாப் பச்சன் அண்மை காலமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகிறார் என்றும், அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கு தான் அவர் சிகிச்சை எடுத்து வருவதாகவும் பாலிவுட்டில் ஒரு வதந்தி பரவியுள்ளது.

இந்த வதந்தி பற்றி பச்சன் குடும்பத்தாரிடம் யாரும் வாய் திறந்து கேட்கவில்லை. இந்நிலையில் அமிதாபின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஜெயா பச்சனிடம் அமிதாப் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாராமே என்று கேட்டுவிட்டார்.
அவ்வளவு தான் ஜெயாவுக்கு கோபம் வந்து அந்த பத்திரிக்கையாளரின் சட்டை காலரை பிடித்து இழுத்து எப்படி நீ என் கணவரை பற்றி அப்படி கேட்கலாம் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.
அதனால் இனிமேல் ஜெயா பச்சனிடம் அமிதாப் பற்றி ஏதாவது கேள்வி கேட்பதாக இருந்தால் பத்திரிக்கையாளர்கள் யோசித்துவிட்டு செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications