ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் கைது செய்யவில்லை? காங். கேள்வி
ஆடம்பர திருமணத்தை நடத்திய ஜனார்த்தன ரெட்டியை ஏன் பாஜக அரசு கைது செய்யவில்லை என காங். கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி: ரூ500 கோடி ஆடம்பர திருமணம் நடத்திய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை என ராஜ்யசபாவில் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கேள்வி எழுப்பினார்.
ராஜ்யசபாவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரம் தொடர்பான விவாதத்தில் ஆனந்த் சர்மா பேசியதாவது:
கர்நாடகா முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மிக பிரமாண்ட திருமணத்தை பெங்களூருவில் நடத்தியுள்ளார். அந்த திருமணத்துக்கு பாஜக தலைவர்கள் சென்று திரும்பியுள்ளனர்.
BJP leaders go to wedding functions of Janardhan Reddy,and they talk about fighting black money,why dont you arrest him?:Anand Sharma in RS
— ANI (@ANI_news) November 16, 2016
அதே பாஜக தலைவர்கள்தான் கருப்பு பணம் பற்றி பேசுகிறார்கள். ஜனார்த்தன ரெட்டியை நீங்கள் ஏன் கைது செய்யவில்லை? கியூவில் நிற்கும் பொதுமக்களை கோவா நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். விவசாயிகள் வரிசைகளில் காத்து கிடக்கிறார்கள்.
இவ்வாறு ஆனந்த் சர்மா பேசினார்.
ரூ500 கோடி ஆடம்பர திருமணம்... சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியை ஏன் கைது செய்ய கூடாது? காங். கேள்வி