மிசோரம்: இன்று வாக்கு எண்ணிக்கை ஏன் ஒத்திவைப்பு? அப்படி என்னதான் 'ஞாயிற்றுக்கிழமை' நடக்கும்?
ஐஸ்வால்: தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. ஆனால் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளை திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4-ந் தேதி நாளை திங்கள்கிழமை நடைபெறும்.

மிசோரமில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் ஏற்கனவே டிசம்பர் 3-ந் தேதிதான் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மிசோரம் மாநில அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒருமித்த குரலில் டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டாம்; டிசம்பர் 4-ந் தேதி நடத்துங்க என்றன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த மிசோரம் மாநில அரசியல் கட்சிகள், மிசோரமில் பெரும்பான்மையாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயங்களில் நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் நாங்கள் இணைந்திருப்போம். அன்றைய தினம் வேறு பணிகளில் ஈடுபடுவதும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை ஆண்டவரை வழிபடுவதற்கான புனித நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால்தான் வேறு ஒரு நாளில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றன.
ஆனால் தேர்தல் ஆணையமோ, இதனை கருத்தில் கொள்ளாமல் 4000-க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டது. அதேநேரத்தில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றும் கோரிக்கையும் வலுத்தது. மிசோரம் மாநில என்.ஜி.ஓக்கள் கூட்டமைப்பு டெல்லிக்கு சென்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை முகாமிட்டு சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். மிசோரமில் ஆளுநர் மாளிகை முன்பாகவும் போராட்டம் நடத்தினர்.
இந்த சூழ்நிலையில்தான் மிசோரம் மக்களின் கோரிக்கையை ஏற்று வாக்கு எண்ணிக்கை தேதியை டிசம்பர் 4-க்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக ஜோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் Lalnghinglova Hmar கூறுகையில், மிசோரம் மாநிலம் என்பது கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ள மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடத்துவது என்பது எங்களுக்கு பெரிய பிரச்சனை. நாங்கள் பொதுவாக 90% அன்றாட செயல்பாடுகளை ஞாயிற்றுக்கிழமையன்று நிறுத்தி வைத்துவிடுவோம். தேவாலய செயல்பாடுகளில் பங்கேற்போம். இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய முடிவை வரவேற்கிறோம் என்றார்.
மிசோரம் மாநிலத்தில் ஆளும் எம்.என்.எஃப் ஆட்சியை பறிகொடுக்கும். எம்.என்.எஃப் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் அதிகமான இடங்களை பெறும். எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. அதே நேரத்தில் எம்.என்.எஃப் அல்லது ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவே சாத்தியம்; இம்மாநிலத்தில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள்தான் கிடைக்கும் என்பதுதான் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்புகள்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications