சசிகலா புஷ்பாவை ஆதரித்த குலாம்நபி ஆசாத்துக்கு ராஜ்யசபாவில் 'நன்றி' சொன்ன அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி. புகார் சொன்னபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த குலாம்நபி ஆசாத்துக்கு அதிமுகவின் மற்றொரு எம்.பி. நவநீதகிருஷ்ணன் திடீரென ராஜ்யசபாவில் நன்றி தெரிவித்தது ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ராஜ்யசபாவில் பற்றி எரியும் காஷ்மீர் குறித்து விவாதம் நடைபெற்றது. காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடக்கும் வன்முறையில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6,000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து இன்று ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.

ஒரு துயரம் தோய்ந்த சம்பவம் தொடர்பான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் மிக ஜாலியாக, பாட்டுப்பாடியபடியே எதை எதையோ பேசி அதை காஷ்மீருடன் முடிச்சு போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் திடீரென காங்கிரஸ் தலைவர்களை ஆஹோ ஓஹோவென பாராட்டத் தொடங்கிவிட்டார். காங்கிரஸ் மூத்த தலைவரான கரண்சிங்கை பாராட்டிய கையோடு திடீரென எதிர்க்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத்தையும் பாராட்டினார்.
ஆனால் அவர் பாராட்டியது காஷ்மீரிகள் என்பதற்காக அல்லவாம்..... "அம்மா பிரச்சனையில் இருந்த போது உதவிய குலாம்நபி ஆசாத், கரண்சிங்குக்கு இந்த தருணத்தில் நன்றி" என்றார் நவநீதகிருஷ்ணன். இது சபையில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிமுக எம்பி ஒருவர் காங்கிரஸ் மூத்த தலைவரை புகழ்ந்ததுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணமல்ல... கடந்த வாரம் இதே ராஜ்யசபாவில் கண்ணீரும் கம்பலையுமாக சசிகலா புஷ்பா எம்.பி, என்னை ஜெயலலிதா அடித்தார் என கதறினார்.... அவரைத் தடுக்க நவநீதகிருஷ்ணன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.
அப்போது இதே குலாம்நபி ஆசாத் எழுந்து, சசிகலா புஷ்பாவை தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்காக ராஜ்யசபாவிலேயே குலாம்நபி ஆசாத்துக்கு சசிகலா புஷ்பா நன்றி தெரிவித்திருந்தார். பின்னர் ஊடகங்களிலும் கூட காங்கிரஸ் தமக்கு முழுமையாக ஆதரவு தருகிறது என்றார்.
இந்த நிலையில் அதே குலாம்நபி ஆசாத்துக்கு திடீரென அன்று அல்லாடிய நவநீதகிருஷ்ணனே அதே ராஜ்யசபாவில் நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதுதான் இந்த ஆச்சரியத்துக்குக் காரணம்...
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications