குருவாயூர் கோவிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே! எடைக்கு எடை 'சந்தனக்கட்டை' துலாபாரம்!!
Subscribe to Oneindia Tamil
குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சனிக்கிழமை வழிபாடு செய்தார். அப்போது எடைக்கு எடை சந்தனக்கட்டைகளை துலாபாரமாக வழங்கினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுடன் சேர்ந்து கிருஷ்ணர் கோயிலுக்கு சனிக்கிழமை காலை வந்தார். அவர்களுடன் இலங்கை கலாசார அமைச்சர் சுவாமிநாதனும் உடன் வந்தார்.
ரணில் விக்ரமசிங்கே, துலாபாரத்தின் மூலம் தனது எடைக்கு எடை (77 கிலோ) சமமாக சந்தனக் கட்டைகளை கோயிலுக்கு தானமாக வழங்கினார். அவற்றின் மதிப்பு ரூ. 8.45 லட்சம் மதிப்பாகும். மேலும் நெய் விளக்கு, பணக்கிழி, வாழை மரங்களையும் அவர் தானமாக வழங்கினார்.












Click it and Unblock the Notifications