ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மனைவி குத்திக் கொலை! மகன் கடத்தல்?
மும்பை: ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.
இந்த நிலையில் கொலை வழக்கை விசாரித்த டீமை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவி அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடு திரும்பினார்
மும்பையின் சாந்தாக்ரூஸ் பகுதியில் இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோர் வீடு உள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு பணி முடிந்து இன்ஸ்பெக்டர் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

செல்போனுக்கு அழைப்பு
வீட்டுக் கதவை தட்டியும் திறக்கப்படாததால், மனைவி செல்போனுக்கு தொடர்புகொண்டுள்ளார். அது நாட் ரீச்சபிள் என வந்துள்ளது. பிறகு எப்படியோ வீட்டுக்குள் சென்றுள்ளார் தியானேஸ்வர்.

கத்தியால் குத்தி கொலை
அங்கு தரையில் அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகே ரத்தக் கறையோடு கத்தி கிடந்துள்ளது. வீட்டுக்குள் இருந்த அவரது மகனும் மாயமாகிவிட்டார். அவரது போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறதாம்.

இன்ஸ்பெக்டர் மகனை எங்கே?
இன்ஸ்பெக்டரின் மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிரார்கள். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications