அடுத்து சி.ஏ.ஏ.தான்... கொரோனா ஓயும் வரை காத்திருக்கிறோம் - அமித்ஷா திட்டவட்டம்
கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக குறைந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்ற நிலையில் தற்போது 77 தொகுதிகளை வென்று இருக்கிறது.

அராஜக ஆட்சி
மேற்கு வங்கத்தில் 2 கோடியே 28 லட்சம் பேர் எங்களுக்கு வாக்களித்து ஒவ்வொரு கிராமத்திலும் பாஜகவை வலுப்படுத்தி இருக்கிறீர்கள். மேற்கு வங்கத்தின் மக்கள் 3 முறை மம்தா பானர்ஜியை முதலமைச்சராக்கி இருக்கின்றனர். அவர் அம்மாநிலத்தை முன்னேற்றி இருப்பார் என்று நினைத்தோம். ஆனால், அவரது ஆட்சியில் அராஜகங்களும் ஊழல்களும் பேரழிவுகளும் நிறுத்தப்படவில்லை.

பாஜகவினர் மீது தாக்குதல்
பாஜக தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கு வங்கத்தில் குறையவே இல்லை. அராஜகமான ஊழல்களும் பேரழிவுகளும் நிறைந்த இந்த ஆட்சியை மேற்கு வங்க மக்கள் தூக்கி எரியும் வரை பாஜக தொடர்ந்து போராடும். தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் ஏராளமான வன்முறைகள் வெடித்தன. மேற்கு வங்கத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை, ஆளும் கட்சியின் ஆட்சி நடக்கிறது என மனித உரிமை ஆணையம் தெரிவிக்கிறது.

தலைவிரித்து ஆடும் வன்முறை
இந்த வன்முறைகளில் 101 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 1,829 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இதில் திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீது 168 க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏதேனும் அம்பாவீதங்கள் நிகழ்ந்தால் திரிணாமூல் காங்கிரஸ் குழுவை மம்தா பானர்ஜி அங்கு அனுப்பி வைப்பார்.

அதிக மின் கட்டணம்
ஆனால், பிர்பாமில் 8 பெண்களும் ஒரு குழந்தையும் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட பிறகும் ஏன் திரிணாமூல் காங்கிரஸ் குழு அங்கு செல்லவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கத்தில்தான் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதிக விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் மாநிலங்களின் பட்டியலிலும் மேற்கு வங்கம் வருகிறது.

சி.ஏ.ஏ. நிச்சயம் வரும்
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அவதூறுகளை பரப்பி வருகிறது. சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படாது என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர். நான் இப்போது சொல்கிறேன். கொரோனா அலைகள் ஓய்ந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி வெளிநாட்டினர் ஊடுருவலை விரும்புகிறார். மேற்கு வங்கத்துக்கு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது. திறந்த காதுகளுடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இதை கேளுங்கள். சிஏஏ என்பது உண்மை. அது விரைவில் மெய்பிக்கப்படும்." என்றார்.
-
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
மகளிர் உரிமை தொகை டூ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் வரை.. 10 வாக்குறுதிகளை கொடுத்த மம்தா பானர்ஜி! -
“மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. தேர்தல் ஆணையத்தின் செயல் சரியில்லை” - மம்தா பானர்ஜி












Click it and Unblock the Notifications