கட்சிகளின் உதவியின்றி அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம்: சங்கராச்சாரியா ஸ்வரூபானந்த சரஸ்வதி
டெல்லி: உச்ச நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தால் அரசியல் கட்சிகளின் உதவியின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டும் என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஜ்யசபாவில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து புதிய சட்டம் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு இந்து அமைப்புகளின் கூட்டமான இந்து தர்ம சன்சாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த்வாரகாபீடத்தின் சங்கராச்சாரியா ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறுகையில்,
ராம ஜென்மபூமி பற்றி பேச வேண்டாம் என்று ராஜ்நாத் சிங்கை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம். ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளித்தால் அது எங்களுக்கு சாதமாக வருமாயின் நாங்கள் எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி கோவிலை கட்டுவோம்.
சாமியார்கள், புனிதர்கள் ராமர் கோவிலை கட்டுவார்கள். கோவில் கட்ட மக்கள் எங்களுக்கு பணம் அளிப்பார்கள். அதனால் அரசியல்வாதிகளின் பணம் தேவை இல்லை. இனியும் ராமர் கோவில் பற்றி ஆலோசிக்காதீர்கள் என்றார்.












Click it and Unblock the Notifications