லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்: எல்.கே. அத்வானி
டெல்லி: லோக்சபா தேர்தலில் தாம் போட்டியிட விரும்புவதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த முறை அவர் டெல்லி சட்டசபை மூலம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது:

நான் ராஜ்யசபா செல்வது குறித்து எதுவும் சொல்லவில்லை. சிலர் இதுபற்றி என்னிடம் கூறினால் நான் அதை ஆலோசிப்பேன். ஆனால் இது இயற்கை தான். நான் அதுபற்றி சிந்தித்து இருந்தால் முன்னதாகவே நான் ராஜ்யசபா எம்.பி.யாகி இருப்பேன்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தான் எனது எண்ணம். குடியரசு தின அணிவகுப்பில் கனரக ஆயுதங்கள் தொடக்கத்திலேயே இடம்பெற்றது நல்ல முடிவு தான். இதற்கு முன்னர் நடந்த அணிவகுப்புகளில் இவை இறுதியாகத்தான் இடம்பெறும்.
நல்ல நிர்வாகத்துக்கு கல்வி, சுகாதாரம் ஆகியவையும் முக்கியம். என்றாலும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் தனிப்பெரும்பான்மை பெற்ற அரசு அமையும் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications