இந்த ஓணம் திலீப்பிற்கு ஜெயிலில் தானா?.. 2வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி!
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
திருவனந்தபுரம் : நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை கேரள ஹைகோர்ட் மறுத்துவிட்டதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை அவர் சிறையில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக மலையாள நடிகையை அட்களை வைத்து காரில் கடத்தில் பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை, ஜூலை, 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை, நடிகர் திலீப் தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சுமார் ஒன்றரை மாதமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் திலீப்.

கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய பல்சர் சுனியை தான் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்றும், அவருடைய பெயர் கூட தனக்குத் தெரியாது என்றும் திலீப் புதிய ஜாமின் மனுவில் கூறியிருந்தார். மேலும் கேரள திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
எனினும் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் இன்னும் பறிமுதல் செய்யப்படாததால் நடிகர் திலீப்பிற்கு நுமின் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டள்ளார். இதனால் நடிகர் திலீப் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications