இந்த ஓணம் திலீப்பிற்கு ஜெயிலில் தானா?.. 2வது முறையாக ஜாமின் மனு தள்ளுபடி!
மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது.
திருவனந்தபுரம் : நடிகர் திலீப்பின் ஜாமின் மனுவை கேரள ஹைகோர்ட் மறுத்துவிட்டதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை அவர் சிறையில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக மலையாள நடிகையை அட்களை வைத்து காரில் கடத்தில் பாலியல் துன்புறுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை, ஜூலை, 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை, நடிகர் திலீப் தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சுமார் ஒன்றரை மாதமாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் திலீப்.

கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய பல்சர் சுனியை தான் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்றும், அவருடைய பெயர் கூட தனக்குத் தெரியாது என்றும் திலீப் புதிய ஜாமின் மனுவில் கூறியிருந்தார். மேலும் கேரள திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
எனினும் நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் இன்னும் பறிமுதல் செய்யப்படாததால் நடிகர் திலீப்பிற்கு நுமின் தர போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டள்ளார். இதனால் நடிகர் திலீப் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications