காஷ்மீருக்கு உரிமை கொண்டாடினால் வாலை ஒட்ட நறுக்கிடுவோம் - பாக்.குக்கு ராஜ்நாத் சிங் பதிலடி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி பாகிஸ்தான் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
மகராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங், காஷ்மீர் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியாகும். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனையை நீக்கிவிட்டு இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என பாகிஸ்தான் தேசிய ஆலோசகர் சர்தாஸ் அஜிஜ் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானை இன்று இவ்வாறு எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications