மரண தண்டனையை எதிர்த்தவர் கலாம்- மரியாதை செலுத்தும் வகையில் யாகூப் மேமனின் தூக்கு ரத்தாகுமா?
டெல்லி: இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமான நிலையில், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர் என்பதால் தூக்குக் கயிறுக்கும், கடைசி தீர்ப்பிற்கும் இடையில் காத்துள்ள யாகூப் மேமனின் தண்டனை கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறைக்கப்படுமா என்ற பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.
மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பது நாட்டின் குடியரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியான பணி அல்ல என்று அப்துல் கலாம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் கருத்திற்கும் ஆதரவு தெரிவித்திருந்திருந்தார்.

இதுகுறித்து கலாம் தான் எழுதிய டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில், "குற்றத்தின் தன்மை, குற்றத்தின் கடுமை, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சமூக, பொருளாதார நிலைமை போன்றவற்றை ஒரு சாதாரண குடிமகனின் நிலையில் இருந்து பரிசீலிக்க வேண்டும் என நான் நினைத்தேன்.
விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்படுகிற தூக்குத் தண்டனைகள் அனைத்தும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதை குடியரசுத் தலைவர் உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான பணி ஆகும். குடியரசுத் தலைவர் மாளிகையில் பல ஆண்டுகளாக இப்படி ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது, எந்தவொரு குடியரசுத் தலைவரும் மகிழ்ச்சியுடன் முடிவு எடுக்கக்கூடிய பணி அல்ல.
கடந்த 1990 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற தனஞ்சய் சாட்டர்ஜிக்கு மரணதண்டனையை உறுதி செய்தேன். இவர் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
எனினும், மரண தண்டனையை எதிர்த்து போடப்படுகிற மேல் முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கிறபோது தண்டிக்கப்படுகிற கைதியின் வாழ்வாதார நிலை, அவரது குடும்பத்தின் நிலை ஆகியவற்றை சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்து தண்டனைக்கு பரிசீலிக்க வேண்டும். இத்தகைய ஆய்வு குற்றவாளி எந்த நோக்கத்தில் குற்றத்தை செய்தார் என்பதை தெளிவாக தெரிய வைத்து விடும். நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள்.
இந்நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயலவில்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் கலாம் மறைந்துள்ளார். எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாகூப் மேமனின் தூக்குக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications