‘பஞ்சாயத்து தலைவராக கூட உத்தவ்தாக்கரேக்கு தகுதி இல்லை’.. நிதிஷ் ரானே கடும் தாக்குதல்!!

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் செய்தியாளர்களிடம் நிதிஷ் ரானே கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருக்கிறேன். இது மட்டுமல்ல, அவர் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை தோல்வியை சந்திப்பார் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
மகாராஷ்டிரா முதல்வராக வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார். அவரது கனவு நகைப்புக்கு உரியது. ஒரு பஞ்சாயத்து தலைவர் ஆவதற்கு கூட அவருக்கு தகுதி இல்லை. நாளைக்கு ராக்கி சாவந்த் கூட முதல்வர் ஆவதற்கு கனவு காணலாம்.
கங்காவலி சட்டசபை தொகுதியில் போட்டியிடுமாறு எனது தந்தை நாராயண் ரானே என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கான களப்பணியை தொடங்கிவிட்டேன். லோக்சபா தேர்தலில் நாங்கள் தோற்று இருக்கலாம். ஆனால், சட்டசபை தேர்தல் முடிவு வித்தியாசமாக இருக்கும்.
இவ்வாறு நிதிஷ் ரானே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications