இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு... ஹிஸ்புல் பயங்கரவாதி சலாவுதின் மிரட்டல் #kashmir
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழு செல்லும் நிலையில், இந்திய ராணுவத்தினருக்கு காஷ்மீர்தான் சுடுகாடு... எண்ணற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகளை ஊடுருவச் செய்திருக்கிறோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி சலாவுதீன் மிரட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி புர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு வன்முறை போராட்டங்கள் வெடித்தன.
இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 மாதம் ஆகியும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை.

ஹூரியத் எதிர்ப்பு
தற்போது ஜம்மு காஷ்மீருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று செல்கிறது. இக்குழுவுக்கு ஹுரியத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சலாவுதீன் மிரட்டல்
அதே நேரத்தில் காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை அங்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சயத் சலாவுதின் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமைதித் தீர்வே இல்லையாம்
இது தொடர்பாக சலாவுதீன் கூறுகையில், காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு என்பதற்கு இடமே கிடையாது. யுத்தத்தின் மூலம் தான் இதற்கு தீர்வு வரும்.

தற்கொலைப்படைகள்
அமைத் தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவோம். இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் எனக் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications