கேரளாவிலும் ஒரு 'கருணாநிதி'....!
திருவனந்தபுரம்: திமுக தலைவர் கருணாநிதியைப் போலவே கேரளாவிலும் ஒரு மூத்த தலைவர் தொடர்ந்து சட்டசபைத் தேர்தல்களில் வென்று வருகிறார். இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இரு தலைவர்களும் தற்போது 13வது தொடர் வெற்றியை எதிர்நோக்கி தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்தான் கே.எம். மணி. கேரள காங்கிரஸ் (மணி) தலைவர்.
முன்னாள் நிதியமைச்சரான மணி இதுவரை பலா தொகுதியில் தான் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 13வது முறையாக பலா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
மணி இதுவரை ஒரே ஒரு தொகுதியில்தான் தொடர்ந்து போட்டியிட்டுள்ளார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தமிழகத்தில் பல தொகுதிகளில் போட்டியிட்ட பெருமைக்குரியவர்.

சட்டசபையில் பொன் விழா
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் பொன் விழா கண்டார். அதேபோல சமீபத்தில்தான் கே.எம். மணியும் சட்டசபையில் தனது பொன்விழாவைக் கொண்டாடினார்.

1957 முதல் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி 1957ம் ஆண்டு முதல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். முதல் தேர்தலில் குளித்தலையில் அவர் போட்டியிட்டார். தற்போது திருவாரூரில் களம் கண்டுள்ளார்.

1965 முதல் மணி
அதேபோல கே.எம். மணி 1965ம் ஆண்டு பலா தொகுதியில் முதல் முறைாக போட்டியிட்டார். அதைத் தொடர்ந்து 1967, 70, 77, 80, 82, 87, 91, 96, 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர்
கேரள சட்டசபையில் அதிக அளவிலான பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தவர் என்ற சாதனையும் மணியிடம் உண்டு. கேரள அரசியலில் அசைக்க முடியாத தலைவராக வலம் வரும் மணிக்கு கடந்த ஆண்டு பெரும் சோதனையாக அமைந்தது.

ஊழலில் சிக்கி பதவியிழந்தவர்
கடந்த ஆண்டு பார் உரிமையாளர்களிடம் பணம் பெற்று அவர்களுக்கு சாதகமாக நடந்ததாக புகார் எழவே வேறு வழியில்லாமல் மணி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

சாதனையாளர்கள்
கருணாநிதியும், மணியும் இந்தத் தேர்தலில் வென்றால் தத்தமது மாநிலங்களில் தொடர்ச்சியாக 13 முறை வென்ற புதிய சாதனையைப் படைப்பார்கள் என்பதால் இரு மாநிலங்களிலும் இந்தத் தலைவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications