முதுகு வலி: அம்மாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் வந்த 'வயர் சேர்'

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: முதுகுவலியால் வாடும் ஜெயலலிதாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட வயர் சேரை அவரிடம் அளிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சர்க்கரை நோயாளியான அவருக்கு முதுகுவலி, முழங்கால் வலி, நெஞ்சுவலி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக அவரை சந்தித்த அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

Wire Chair comes from Chennai for Jayalalithaa

முதுகுவலியால் அவதிப்படும் ஜெயலலிதாவுக்காக சென்னையில் இருந்து அரசு வாகனத்தில் வயர் சேர் கொண்டு வரப்பட்டது. அந்த சேரை ஜெயலலிதாவிடம் கொடுக்குமாறு அதிமுகவினர் தெரிவிக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நீதிமன்ற அனுமதி இன்றி சேரை அவரிடம் கொடுக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் சிறை வளாகத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வயர் சேரை எப்படி ஜெயலலிதாவிடம் கொடுப்பது என்று தெரியாமல் அதிமுகவினர் சிறை வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கடேஷன், 4 பேர்களுடன் பெங்களூர் சிறை வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கின்றார்.

விரட்டியடிப்பு:

ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்று சிறை வளாகம் முன்பு கூடி கலாட்டா செய்த 50 அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+