மாமனார், கணவரின் நண்பர் பலாத்காரம் செய்துவிட்டனர்: பெண் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னை மாமனாரும், கணவரின் நண்பரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தெற்கு டெல்லியில் உள்ள கோவிந்த்புரியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவரை ஓராண்டுக்கு முன்பு அவரது மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து இந்த ஆண்டு தான் கணவரின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அவரை அவரது கணவர் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தனது நண்பர் சோனுவை(32) அந்த பெண்ணுக்கு அவரது கணவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த நபர் அப்பெண்ணை கடந்த மாதம் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் மாமனார் மற்றும் சோனு மீது புகார் கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எனது மாமனார் ஓராண்டுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் என் கணவரின் நண்பரான சோனு(32) என்னை கடந்த மார்ச் மாதம் பலாத்காரம் செய்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+