தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற "மங்கி"... புகார் கொடுத்த பெண்... குழப்பத்தில் போலீஸ்
லக்னோ: தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்ற குரங்கு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் போலீசில் புகார் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கவுசல்புரியைச் சேர்ந்தவர் ஊர்மிளா சக்சேனா. இவர் நேற்று மாலை அருகில் இருந்த கோவில் ஒன்றிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று ஊர்மிளாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முற்பட்டது.

குரங்கிடம் இருந்து தனது தங்கச்சங்கிலியைக் காப்பாற்ற ஊர்மிளா கடுமையாக போராடினார். இறுதியில் குரங்கின் கையில் இருந்து பாதிச் சங்கிலியைத் தான் ஊர்மிளாவால் பிடுங்க முடிந்தது. மீதிச் சங்கிலியுடன் மரத்தில் ஏறி தப்பிச் சென்றது குரங்கு.
கோவிலில் இருந்து நேராக நசிராபாத் காவல் நிலையம் சென்ற ஊர்மிளா, சங்கிலியைப் பறித்துச் சென்ற குரங்கு மீது புகார் அளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட குரங்கு மீது வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து, பறிபோன தனது தங்கச் சங்கிலியை மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார்.
செயின் பறிப்பு தொடர்பாக பிரபல ரவுடிகள் மீது அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கண்டுபிடித்து நகைகளைப் பறிமுதல் செய்வதே பெரும்பாடாக உள்ள நிலையில், குரங்கின் மீது எந்த சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்வது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் உத்திரப்பிரதேச போலீசார்.
மேலும், மரம் மரமாக ஏறி அந்தக் குரங்கை எப்படி அடையாளம் கண்டு, மீதி சங்கிலியை எப்படி மீட்பது என அவர்கள் தலையைச் சொரிந்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications