கத்தி முனையில் பெண் வங்கி மேலாளரை கடத்திய கும்பல் – கத்தி ஊரைக்கூட்டி தப்பித்தார்!
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் கத்தி முனையில் காரில் கடத்த முயன்ற கும்பலிடம் இருந்து தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றும் பெண் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸில் உள்ள எச்.எப்.டி.சி வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகின்றார் மஞ்சு ஷர்மா என்ற பெண்மணி.
அவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கத்தி முனையில் கடத்தல்:
க்ரிஸ்ட்டல் சவுக் பகுதியை நெருங்கியபோது காரை வழிமறித்த ஒரு கும்பல் கத்தி முனையில் மஞ்சு ஷர்மாவை கடத்தியது.
கூச்சல் போட்ட மஞ்சு:
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குருத்வாரா ஷஹீத் கஞ்ச் சாஹெப் பகுதியை கார் நெருங்கியபோது சமயோஜிதமாக செயல்பட்ட மஞ்சு ஷர்மா பயங்கரமாக கூச்சலிட்டு அலறத் தொடங்கினார்.
தப்பி ஓடிய கடத்தல் கும்பல்:
இதைக் கண்டு மிரண்டுப் போன அந்த கடத்தல் கும்பல், காரை விட்டு கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்தது.
தேடுதல் வேட்டை:
மஞ்சு ஷர்மா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கடத்தல் கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications