ம.பி.: மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற பெண்
போபால்: மத்திய பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது மைத்துனரின் ஆணுறுப்பை அறுத்து அதை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் மைத்துனர் இருக்கும் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக்கில் வேலை செய்து வருகிறார்.

அந்த பெண்ணை மைத்துனர் பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மைத்துனர் தனது சகோதரரின் மனைவியை கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் அரிவாளை எடுத்து மைத்துனரின் ஆணுறுப்பை துண்டாக வெட்டினார். வெட்டிய பாகத்துடன் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே அந்த பெண்ணின் மைத்துனர் தனது வீட்டிற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்த பெண்ணுக்கு மனநலம் சரியில்லை என்றும், அவர் தான் செய்த செயலுக்காக வருந்தவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications