ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் 26 வயது இளம் பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை
டெல்லி: டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில், 26 வயதான இளம் பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவருடைய தந்தை ராஷ்டிரபதி பவனில் பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலையில் இப்பெண்ணின் உடல் தொங்கிய நிலையில் பார்க்கப்பட்டது.
நேற்று இரவே இவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இரவு முழுவதும் தொங்கிய நிலையிலேயே அவர் உடல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் சிக்கவில்லை. அப்பெண்ணின் பெயர் சசியா. இவரும் இவரது கணவரும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டனர். அது முதலே வேதனையில் இருந்து வந்தார் சசியா. தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் தற்கொலை முடிவை அவர் எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications