சத்து மாத்திரையின் கேப்ஸ்யூலுக்குள் செத்துக்கிடந்த கொசு: அதிர்ச்சி அடைந்த பெண்
டெல்லி: ரம்யா வெங்கட் என்பவர் தான் உண்ணவிருந்த கேப்சுலில் இறந்த கொசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரம்யா வெங்கட் என்பவர் கர்ப்பமாக இருந்தபோது அவரை எம்.ஏ. டி.ஹெச்.ஏ. கேப்சுல்களை எடுத்துக் கொள்ளுமாறு அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரும் அந்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகும் அந்த மாத்திரையை தொடர்ந்து உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Woman finds dead mosquito in capsule http://t.co/0GkwqhwvEk pic.twitter.com/mKs0OEOviX
— TheNewsMinute (@thenewsminute) July 8, 2015 அதனால் அவர் அந்த சத்து மாத்திரையை சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் 13ம் தேதி அவர் எம்.ஏ. டி.ஹெச்.ஏ. கேப்சுல்களை மருந்தகத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார். ஒரு நாள் வழக்கம் போல மாத்திரையை உட்கொள்ளும் முன்பு அதை பார்த்தபோது கேப்சுலுக்குள் இறந்த கொசு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அந்த கேப்சுலை புகைப்படம் எடுத்து அதை தயாரித்த நிறுவனமான நோவோ மெடிக்கமென்ட் பிரைவேட் லிமிடெட்டுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைத்தார். அவர்கள் புகைப்படத்தை பார்த்துவிட்டு கேப்சுலுக்குள் ஏதோ கருப்பாக இருக்கிறது, எங்கள் ஆளை அனுப்பி வைக்கிறோம். அவர் ஆய்வு செய்து அது என்னவென்பதை கண்டுபிடிப்பார் என்று பதில் அனுப்பியது.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் ரம்யாவின் வீட்டிற்கு வந்து கேப்சுலை ஆய்வு செய்து அதற்குள் இருப்பது இறந்த கொசு தான் என்பதை உறுதி செய்தார். மருந்து நிறுவனமோ கொஞ்சமும் வருத்தப்படாமல் இதற்கு பதில் வேறு டப்பா கேப்சுலை வழங்கியுள்ளது.
கொசு இருந்த கேப்சுலுக்கு பதில் வேறு கேப்சுல் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? மருந்து தயாரிப்பாளரின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரம்யா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications