காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம்... ரூ 5,000 திருட்டு - இது டெல்லியில்!
அடுத்தடுத்து நாடு முழுவதும் நடந்து வரும் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்களால் மக்கள் குறிப்பாக பெண்கள் அதிர்ந்து போயுள்ளனர். சிறு குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாரபட்சமில்லாமல் காமக் கொடூரர்களால் சூறையாடப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
உத்திரப்பிரதேசத்திலுள்ள மதுராவைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் குர்கான் போய் விட்டு நேற்றிரவு காரில் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தேசிய நெடுஞ்சாலை 8 அருகே அவரது கார் பயணித்துக் கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பலொன்று அவரது காரை வழிமறித்துள்ளது. துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல், அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணத்தையும் பிடிங்கிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்து வரும் போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் தொடரும் இது போன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், ஓடும் காரை வழிமறித்து பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், இரவு நேரங்களில் வாகனங்களில் பயணம் மேற்கொள்வோரை மேலும் பீதியடைய வைத்திருக்கிறது.