இளம்பெண்ணை கேங் ரேப் செய்த 3 பேர்... சினிமா போல கிளைமேக்சில் வந்து கைது செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று நபர்களை, சம்பவ இடத்திலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

பணி முடிந்து வீடு திரும்புவதற்காக 21 வயது இளம்பெண் ஒருவர், மும்பை ரே சாலை ரயில்நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ளார். அப்போது அவருடன் பேச்சு கொடுத்துள்ளனர் சலீம் ஷேக் உள்ளிட்ட மூன்று ஆண்கள். ரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாததால், அப்பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்ப்பது தங்களது கடமை என அவர்கள் வாக்குறுதியும் கொடுத்துள்ளனர்.

Woman gangraped in Mumbai, three accused arrested

அம்மூவரின் பேச்சை நம்பிய அப்பெண், அவர்களுடன் சேர்ந்து வேறு பயணிகள் யாருமே இல்லாத ரயில் பெட்டியில் ஏறியுள்ளார். ரயில் காட்டன் கிரீன் ரயில் நிலையத்தைச் சென்றடைந்த போது அப்பெண்ணை மிரட்டி கீழே இறங்கச் செய்துள்ளது அந்தக் கும்பல்.

பின்னர், மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக இரவு ரோந்து சென்ற போலீசார், அப்பெண்ணின் அழுகுரல் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தப்பியோட முற்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸ், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் மீதும் முந்தைய வழக்குகள் எதுவும் இல்லை என்றும், கிடைத்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் வரும் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+