For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்த முயற்சி... பூந்தொட்டியை வீசிய பெண் கைது

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்துவதற்காக பூந்தொட்டியை வீசிய பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தமது அலுவலகம் அருகே விஜய்சவுக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை ஒதுங்கி செல்லுமாறு அவரது பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Woman hurls flower pot at the PM's convoy in Delhi

இதில் ஆத்திரமடைந்த அப்பெண், திடீரென அருகே இருந்த பூந்தொட்டி ஒன்றை எடுத்து மோடியின் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி வீசினார். ஆனால் அது பாதுகாப்பு வாகனம் மீது விழாததால் சேதம் ஏற்படவில்லை.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பூந்தொட்டியை வீசிய பெண்ணை பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Delhi Woman was detained after she hurled a flower-pot at PM's convoy at South Block today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X