காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பெண் உள்பட தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை
உதம்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள், தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சண்டையில் பெண் ஒருவரும் உயிரிழந்தார்.
ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீநகரில் இருந்து பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது அப்போது உதம்பூர் மாவட்டம் நாகா பகுதியில் போலீசார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில் பதுங்கி இருந்த தீவிரவாதி பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

பல மணிநேரமாக நீடித்த இந்த சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் உதம்பூர் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகள் பலர் சண்டை நடைப்பெற்று வரும் இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே நடந்து வரும் தீவிர துப்பாக்கிச் சண்டையை அடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் அங்கு பல கிலோ மீட்டர்களுக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications