மேகாலயாவில் குழந்தைகள், கணவர் கண் முன்பு பெண் சுட்டுக் கொலை
ஷில்லாங்: மேகாலயாவில் பெண் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் அவரது 5 குழந்தைகளின் கண் முன்பு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலம் தெற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கேரோ தேசிய விடுதலை முன்னணி என்ற போராளிகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அம்மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் 5 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். இதை அந்த பெண் எதிர்த்ததால் அவர்கள் துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணின் தலையில் 6 முறை சுட்டனர்.
இதில் அந்த பெண் தலை சிதறி பரிதாபமாக உயிர் இழந்தார். அவருக்கு வயது 35. கேரோ ஹில்ஸ் மாவட்டத்தில் கேரோ தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த போராளிகள் கொலை, கடத்தல், பணம் பறித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் மேகாலயாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications