உ.பி.யில் வரதட்சணைக் கொடுமை: உணவில் விஷம் வைத்து இளம்பெண் படுகொலை
முசாபர்நகர்: வரதட்சணைப் பிரச்சினை காரணமாக கணவரின் உறவினர்களால் இளம்பெண் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சமீபகாலமாக இந்தியாவிலேயே பரப்பளவில் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது அந்த வரிசையில் வரதட்சணைக் கொடுமையும் இணைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புவரா கிராமத்தை சேர்ந்த ஜெய்ல் சிங் என்பவரது மனைவி நேஹா (28). சர்க்கரை ஆலை ஒன்றில் எஞ்சினீயராக வேலை செய்து வருகிறார் ஜெய்ல் சிங்.
இந்நிலையில், நேற்று நேஹா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்த நேஹாவின் குடும்பத்தார், வரதட்சணைப் பிரச்சினைக் காரணமாகவே அவர் கொலை செய்யப் பட்டுருக்கலாம் என கட்டோலி போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நேஹாவின் சகோதரர் பங்கஜ் என்பவர் கூறுகையில், சமீபகாலமாக ஜெய்ல் சிங் குடும்பத்தார் தனது தங்கையை கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தி வந்ததாகவும், தற்போது உணவில் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேஹாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications