மிசோரி ஐ.ஏ.எஸ். அகாடமியில் 6 மாதம் தங்கியிருந்த 'மர்ம பெண்' யார்?
மிசோரி: மிசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமியில் ட்ரெய்னீ ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி 6 மாதங்கள் தங்கி திடீர் என மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் லால் பகதூர் சாஸ்திரி நிர்வாக அகாடமி செயல்பட்டு வருகிறது. அங்கு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரைச் சேர்ந்த ரூபி சவுத்ரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் தான் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி அந்த அகாடமிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி வந்துள்ளார். அன்றில் இருந்து அவர் அங்கு தான் தங்கியுள்ளார்.
அப்போது அவர் அகாடமியின் நூலகத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் என்று மாயமாகிவிட்டார். இதையடுத்து அந்த அகாடமியின் நிர்வாக அதிகாரி சத்யவீர் சிங் ரூபி மாயமானது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகு தான் ரூபி பொய் சொல்லி அந்த அகாடமியில் அதுவும் 6 மாதங்கள் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
அந்த ஆறு மாதங்களில் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. அந்த பெண் பாதுகாப்பு அதிகம் உள்ள அந்த அகாடமிக்குள் எப்படி நுழைந்தார், அங்கு ஆறு மாதங்கள் எப்படி யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தங்கியிருந்தார் என்று போலீசார் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூபி தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகிறார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள அகாடமியில் ஒரு பெண் தன்னை ஐஏஎஸ் பயிற்சியாளர் என்று கூறி தங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications