Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமனார், மாமியாரை வெட்டி கொன்று, கணவனை கொலை செய்ய முயன்ற பெண், காதலனுடன் கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மாமனார், மாமியாரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மருமகளும், அவரது கள்ளக்காதலனும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவரை கொலை செய்ய முயன்றபோது, அவர் அதிருஷ்டவசமாக தப்பியுள்ளார்.

வேலூரை சேர்ந்தவர் கண்ணன் (70) அவரது மனைவி மனோரமணி (65) மகன் மணிகண்டன் (34), மருமகள் துர்கா (24). மணிகண்டன்-துர்கா நடுவே 8 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர்.

Woman with lover, kills in-laws

பெங்களூரின் காடுகோடி பகுதியில் தங்கியிருந்தது இந்த குடும்பம். கண்ணன்-மனோரமணி இருவரும் காய்கறி விற்று பிழைப்பு நடத்திய நிலையில், மணிகண்டன், அங்கிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ள எலக்ட்ரானிக்சிட்டி பகுதியில் லேப்டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் துர்காவுக்கும் அவரது உறவுக்காரர் அன்ஜி (23) என்பவருக்கும் கள்ளக்காதல் கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ளது. அன்ஜி பஞ்சாப்பில், ராணுவத்தில் பணியிலுள்ளவராகும். அவ்வப்போது பெங்களூர் வந்து துர்காவுடன் நெருக்கமாக இருந்துள்ளார் அன்ஜி. தொடர்ந்து தொலைபேசியிலும் இருவரும் காமரசம் சொட்ட பேசிவந்துள்ளனர்.

மருமகளின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததும், கண்ணன்-மனோரமணி இருவரும் கண்டித்துள்ளனர். இது துர்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அன்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நாம் இருவரும் ஊரை விட்டு ஓடிவிடலாம் என கூப்பிட்டுள்ளார்.

துர்காவின் ஐடியாவை ஏற்ற அன்ஜி, ரயில் மூலம், பெங்களூருக்கு வந்து சேர்ந்துள்ளார். காலை வேளை முழுக்க ரயில் நிலையத்தில் இருந்த அன்ஜி, துர்கா தவிர அனைவரும் வேலைக்கு போனதை அறிந்து காலை 11 மணியளவில் துர்கா வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஓடிப்போகும் முன்பாக உல்லாசமாக இருக்கலாம் என இருவரும் காம லீலையை ஆரம்பித்துள்ளனர். 11.30 மணியளவில் கண்ணன் திடீரென வீடு திரும்பியுள்ளார். மருமகளும், அவரது உறவுக்காரரும் உடலுறவு செய்துகொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதை பார்த்த அன்ஜி, கோபத்தில், கண்ணனை அரிவாளால் வெட்டியுள்ளார்., சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். மதியம் சாப்பாட்டுக்கு வீடு திரும்பியுள்ளார் மனோரமணி. அவரையும் மறைந்திருந்து திடீரென வெட்டி சாய்த்துள்ளார் அன்ஜி.

இருவர் சடலங்களையும் வீட்டுக்குள் ஓரிடத்தில் எடுத்துப்போட்ட அன்ஜியும், துர்காவும், மணிகண்டனை கொலை செய்ய காத்திருந்தனர். இரவு 7 மணியளவில் மணிகண்டன் வீடு திரும்பியுள்ளார். அன்ஜி பெட்ரூமில் ஒழிந்திருந்த நிலையில், துர்கா ஒன்றுமே நடக்காததை போல கணவனை வரவேற்று காபி கொடுத்துள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

மின்சாரம் மீண்டும் வந்ததும் 7.30 மணியளவில், பெட்ரூமுக்குள் செல்போனுக்கு சார்ஜ் போட சென்றுள்ளார் மணிகண்டன். அங்கு மறைந்திருந்த அன்ஜி, அரிவாளால் மணிகண்டனை வெட்டியுள்ளார். அவரது தலையில் வெட்டு விழுந்துள்ளது. இதன்பிறகு, மீண்டும் அன்ஜி அரிவாளை ஓங்கியபோது, மணிகண்டன் சுதாரித்துக்கொண்டு, அன்ஜியை மிதித்து தள்ளிவிட்டு வெளியே ஓடியுள்ளார்.

மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த அன்ஜியும், துர்காவும் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்து மக்கள் அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்து காவல்துறையிடம் பிடித்து கொடுத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+