செக்ஸ் தொந்தரவு புகார்- மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் ராஜினாமா கோரி ஷில்லாங்கில் போராட்டம்
பாலியல் தொந்தரவு புகாருக்குள்ளான மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் ஷில்லாங்கில் பெண்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷில்லாங்க்: பாலியல் தொந்தரவு புகாருக்குள்ளான மேகாலயா மாநில ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன் ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஷில்லாங்கில் பெண்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
மேகாலயா ஆளுநர் மாளிகையில் மக்கள் செய்தித் தொடர்பாளர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவரிடம் சண்முகநாதன் தவறாக நடக்க முயன்றார் என்பது புகார். ஆனால் சண்முகநாதன் இதனை மறுத்துள்ளார்.

இருப்பினும் ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றிவிட்டார் என ஜனாதி, பிரதமருக்கு 5 பக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
Shillong:Thma-U-Rangli-Juki organisd campaign in frnt of Raj Bhawan demnding removal of Guv V Shanmuganathan fr allegd molestation of a girl pic.twitter.com/ThVkpdf5Mu
— ANI (@ANI_news) January 26, 2017
இந்த நிலையில் இன்று மாலை ஷில்லாங்கில் ராஜ்பவன் முன்பாக சண்முகநாதன் பதவி விலக கோரி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது சண்முகநாதனை நீக்கக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கமும் அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications