For Quick Alerts
For Daily Alerts
Just In
பம்பை நதியில் பெண்கள் குளிப்பதற்கு தடை: திருவிதாங்கூர் தேவஸ்தானம்
சபரிமலை பம்பை நதியில் பெண்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை: சபரிமலை செல்லும் பக்தர்கள் நீராடும் முக்கிய நதியான பம்பையில் பெண்கள் குளிக்கத் தடை விதிக்கப்படுவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐய்யப்பன் கோயில் தரிசனத்திற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சில பெண்கள் ஐய்யப்ப பக்தர்களுடன் பம்பை வரை வருகிறார்கள். இவ்வாறு வரும் பெண்கள் பம்பை நதியில் குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், பம்பை நதியின் புனித தன்மை கெட்டு விடக் கூடாது என்பதற்காக பெண்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும். புனித தலமான சபரிமலையினை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டாம். எனவே அந்த நதியில் பெண்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.
Comments
English summary
travencore temple comittee decission dont bath ladies in pampa river.some devotees complient against this issue.so comitte decide not bath ladies in pampa river.
Story first published: Saturday, December 3, 2016, 3:29 [IST]