"ஜிக்கா" வைரஸுக்கு ஒன்று அல்ல 2 தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம்: இந்திய விஞ்ஞானிகள்
ஹைதராபாத்: உலகை மிரட்டும் ஜிக்கா வைரஸுக்கு ஒன்று அல்ல இரண்டு மருந்துகளை கண்டுபிடித்துவிட்டோம் என ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளை கொசுக்கள் மூலம் பரவும் ஜிக்கா வைரஸ் மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மருந்தே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. வைரஸ் தாக்காமல் தடுக்கவும், தாக்கினால் சிகிச்சை அளிக்கவும் மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஹைதராபாத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தான் மருந்து கண்டுபிடித்துள்ளது.

ஜிக்கா வைரஸுக்கு இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை விலங்குகள் மற்றும் மனிதர்களை வைத்து சோதனை செய்ய பல காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பாரத் பயோடெக் சர்வதேச லிமிடெட் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எல்லா கூறுகையில்,
உலகிலேயே நாங்கள் தான் முதன்முதலாக ஜிக்கா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து அதற்கு காப்புரிமை கோரி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு விண்ணபித்தோம். முறைப்படி அனுமதி பெற்று ஜிக்கா வைரஸை இங்கு கொண்டு வந்து ஆய்வு செய்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருந்தை சோதனை செய்ய அரசிடம் உதவி கோரியுள்ளோம் என்றார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில்,
பாரத் பயோடெக் ஜிக்கா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக எங்களிடம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமாக அதை ஆய்வு செய்வோம். இந்தியாவில் ஜிக்கா வைரஸுக்கு மருந்து தயாரித்திருப்பது நல்ல விஷயம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications