Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் போட்டு புழக்கத்தில் விட்ட ஆபரேட்டர் கைது!

பஞ்சாப்பில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் போட்ட கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து மோசடி செய்ய முயன்ற அதன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமிர்தசரஸை அடுத்த பிக்கிவிண்ட் நகரைச் சேர்ந்த சந்தீப் குமார் என்பவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதிகளவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழங்குவதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் 2000 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருந்த சந்தீப்குமார் மற்றும் அவரது நண்பர் ஹர்ஜிந்தர் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Xerox operator arrested for taking copies of Rs 2000 note

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிக்கிவிண்ட் பகுதியில் மிக குறைந்தளவே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் அவற்றை ஜெராக்ஸ் எடுத்து மக்கள் மத்தியில் விட்டால் கண்டுபிடிக்க முடியாது என்றும் அவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டு பரிச்சயம் இல்லாததால் அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்றும் திட்டம்போட்டு செயல்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும் இதில் குர்மிலாப் சிங் என்பவருக்கும் தொடர்புள்ளதை கண்டுபிடித்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+