ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழல்: பிரதமருக்கு யஷ்வசிங் சின்ஹா கடிதம்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மற்றொரு ஊழலுக்கு வாய்ப்பிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பிய கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக யஷ்வந்த் சின்ஹா அனுப்பியுள்ள கடிதத்தில், அண்மையில் டிராய் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான அடிப்படை விலையை பல மடங்கு குறைத்து அறிவித்தது. டிராய் பரிந்துரைகளின் படி 1800mhz பேண்டின் விலை ரூ.2376 கோடியிலிருந்து ரூ.1496 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது 37 சதவீத விலைகுறைப்பாகும்.

மும்பை, டெல்லி உட்பட பெருநகரங்களில் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அதிரடியாக குறைத்திருப்பதன் மூலம் சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆதாயம் அடைய வழிவகுக்கும். இந்த விலைக்குறைப்பால் ரூ.27,000 கோடி வரை அரசுகு இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications