டெல்லி: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா.
எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் நீதிபதிகள் அசோக் பூஷண், பாப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த எடியூரப்பாவின் கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது இக்கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.
மேலும் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
May 18, 2018, 2:08 pm IST
கர்நாடகாவைப் போல தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோவா, பீகாரில் ஆளுநர்களிடம் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர். அதில் தனிப்பெரும் கட்சி என்பதாலும் பிற கட்சிகளின் ஆதரவு இருப்பதாலும் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள், கட்சிகள் கடிதங்களையும் ஆளுநர்களிடம் கொடுத்துள்ளனர்.
RJD and other alliance parties-Congress and CPI(ML) hand over letters to Governor Satyapal Malik stating that RJD is the single largest party hence should be invited to form Government pic.twitter.com/NdTSuvBsB0