Breaking News Live: கர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு- உச்சநீதிமன்றம்
எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
டெல்லி: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவார கால அவகாசம் கேட்ட பாஜகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. முன்னதாக எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தார் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா.
எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் நீதிபதிகள் அசோக் பூஷண், பாப்தே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த எடியூரப்பாவின் கடிதங்களின் நகல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். இன்றைய விசாரணையின் போது இக்கடிதங்கள் தாக்கல் செய்யப்பட்டனர்.
மேலும் பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
RJD and other alliance parties-Congress and CPI(ML) hand over letters to Governor Satyapal Malik stating that RJD is the single largest party hence should be invited to form Government pic.twitter.com/NdTSuvBsB0
— ANI (@ANI) May 18, 2018