ஏமனில் இருக்கும் எங்கள் மக்களையும் காப்பாற்றுங்கள்: இந்தியாவிடம் உதவி கேட்கும் 26 நாடுகள்
டெல்லி: ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்தியா எடுத்துள்ள முயற்சியை பார்த்து பாராட்டி தங்களுக்கும் உதவுமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட 26 நாடுகள் கேட்டுள்ளன. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்பது எளிது அல்ல.
ஏமனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிக்கு ஆபரேஷன் ராஹத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏமனின் அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு நல்லபடியாக உள்ளதால் இந்தியர்களை மீட்கும் பணி சற்று எளிதாகியுள்ளது.

மீட்பு பணிகளை பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் கண்காணித்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் ஏமனின் அண்டை நாடான ஜிபோத்தியில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
ஆபரேஷன் ராஹத் மூலம் ஏமனில் சிக்கித் தவிக்கும் 4 ஆயிரம் இந்தியர்களில் 2 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமனில் துப்பாக்கிச்சூடுகள், குண்டுவெடிப்புகள், வான் வெளித் தாக்குதல்கள் நடந்து வரும் ஆபத்தான வேளையில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறார்கள்.
ஏமனில் உள்ள ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏமனில் சில இடங்களில் சவுதி வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சவுதியின் உதவி இல்லாமல் இந்தியர்களை மீட்பது கடினம் என்பதை இந்தியா புரிந்து கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி சவுதி மன்னர் சல்மானுடன் இது குறித்து தொடர்பில் இருப்பதால் தான் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முன்னதாக ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்ட அனுபவம் தற்போது கை கொடுக்கிறது.
அதற்கும் முன்பு 2006ம் ஆண்டு லெபனானில் இருந்தும், 2011ம் ஆண்டு லிபியாவில் இருந்தும் இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications