ராமர் கோவில் கட்ட ரூ.300 கோடி தாங்க.. கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூபாய் 300 கோடி உதவி கேட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூபாய் 300 கோடி உதவி கேட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் பதவி ஏற்றவுடன் உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இதற்கு 300 கோடி செலவாகும் என்று கூறினார்.
இதற்கான போதிய நிதி அரசிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சில புதிய திட்டங்களுக்கும் உதவி கேட்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை
இதற்காக தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் அம்மாநில அரசு உதவி கேட்டு இருக்கிறது. மொத்தமாக 300 கோடி ரூபாய் பணமும் கேட்டு உள்ளது. இதற்காக வரி வசூலிக்கப்படாது என்று அரசு கூறியுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்தால், கோவிலில், அந்நிறுவனம் சார்ந்த விளம்பரங்கள் இடம்பெறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நிறைய திட்டம்
அங்கு ராமர் சிலையும் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ராமாயண கேலரி, ராம் லீலா மறுமலர்ச்சி திட்டம், ராம் முக சிலை, ராம் - சீதா கல்யாண அரங்கம், ராமாயணத்தில் வரும் பெரிய நபர்களுக்கு சிலை, அயோத்தி புதிய நிர்மாணம், கோவில்களுக்கு சாலைகள், கோவில்களுக்கு மின்வசதிகள் என நிறைய திட்டம் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதற்காக மட்டும் பட்ஜெட்டில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஒதுக்கப்பட இருக்கின்றது.

குஜராத்தில் இதே போல்
இதே போல் குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு கட்டப்பட இருக்கும் ''ஒற்றுமைக்கான சிலை'' என்ற பெயர் பெற்றுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கும் ரூ.121 கோடி ரூபாய் நிதி வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, இந்தியாவின் முன்னணி பொது எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் சிலைக்கு தனியாக பணம் அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசம்
இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே மோசமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து இப்படி சிலை கட்டுவதற்காக பணம் வாங்குவது பெரிய தவறு என்று கூறியுள்ளனர். அந்த பொதுத்துறை நிறுவனங்கள் அவர்களின் துறை சார்ந்த வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இதை பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications