மேலாண்மை வாரியம்: தமிழகத்துக்கு துரோகம் தான் செய்வோம்- சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் அடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தங்களுக்கு உத்தரவிடும் அதிகார வரம்பு உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று மத்திய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.

காவிரியில் நீரை திறந்துவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டது; காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவும் உத்தரவிட்டது.

You dont have jurisdiction centre tells SC

ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகாவும் மத்திய அரசும் ஏற்கவில்ல. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட முடியாது என்கிறது கர்நாடகா. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த வஞ்சகம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதிமுகவின் எம்பிக்கள் இன்று பிரதமர் மோடி அலுவலகம், நீர்வளத்துறை அமைச்சகங்களிடம் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனு கொடுத்தனர்.

ஆனாலும் தமிழகத்துக்கு துரோகம் செய்தே தீருவோம் என மத்திய அரசு அடம்பிடித்து வருகிறது. இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை; நாடாளுமன்றம்தான் உத்தரவிட முடியும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டிருப்பது தமிழக விவசாயிகளை கொதிப்படைய வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+