உபேர் டாக்சி ஆபீஸை கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் பட்ட பாட்டைப் பாருங்க!
டெல்லி: டெல்லியை உலுக்கியுள்ள உபேர் டாக்சி டிரைவரின் பாலியல் பலாத்கார வழக்கில், அந்த டாக்சி நிறுவனத்தின் அலுவலகத்தைக் கண்டுபிடிக்க டெல்லி போலீஸார் கடுமையாக திணறிப் போயுள்ளனர்.
இதுகுறித்து வடக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதுர் வர்மா கூறுகையில் முதலில் இந்த உபேர் நிறுவனம் எங்கிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து ஆன்லைனில் தகவல் தேடினோம். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அந்த நிறுவனத்தின் அலுவலகம் எங்கே இருக்கிறது என்பது குறித்த விவரம் தெரியவில்லை. எங்களுக்கு எந்த க்ளூவும் கிடைக்கவில்லை.

மேலும் எந்தக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது என்று எங்களுக்குத் தெரியவந்தது. ஆனால் நாங்கள் டெல்லி முகவரியைத் தேடி வந்தோம்.
எங்களுக்கு சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்குப் புகார் வந்தது. புகார் கொடுத்த பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலையும் இருந்தது. எங்களது தேடுதலில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
இதையடுத்து டெல்லி போலீஸார் இணையதள தேடுதலை விட்டு விட்டு தெருவில் இறங்கினர். உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் ஆப்பை முதலில் டவுன்லோடு செய்தனர். பின்னர் Paytm கணக்கை ஆக்டிவேட் செய்தனர். உபேர் டாக்சிக்கான கட்டணத்தை Paytm மூலமாகத்தான் செலுத்த முடியும். இதையடுத்து ஒரு டாக்சியை புக் செய்தனர்.
அதன் பின்னர் ஒரு உபேர் டாக்சி போலீஸார் சொன்ன முகவரிக்கு வந்து சேர்ந்தது. அந்த டாக்சியின் டிரைவரைப் பிடித்த போலீஸார், அவரிடம் உபேர் நிறுவன அலுவலகத்திற்குக் கூட்டிக் கொண்டு போகுமாறு கூறியுள்ளனர். அவரும் குர்கானில் உள்ள அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டார். அதன் பிறகுதான் குற்றவாளி டிரைவர் குறித்த விவரம் போலீஸாருக்குத் தெரிய வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications