'எங்கள் கிராமத்தை வந்து பாருங்கள் சார்..' பிரதமர் மோடிக்கு ஒடிசா சிறுவன் உருக்கமான கடிதம்
ஒடிசாவை சேர்ந்த 10 வயது சிறுவன் தனது கிராமத்தை நேரில் வந்து பார்க்குமாறு கடிதம் எழுதியுள்ளான்.
புவனேஸ்வர்: ஒடிசாவில் வேகமாக பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கடிதம் மூலமாக சிறுவன் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.
ஒடிசாவில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. என்சிபாலிட்டிஸ் என்ற வைரசால் ஏற்படும் இந்த ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் அறிகுறி 5 முதல் 15 நாட்களுக்கு பிறகே தெரியவரும். பன்றிகள் மற்றும் பறவைகளிடமிருந்து தோன்றிய இந்த வைரஸ் தற்போது கொசு மூலம் மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த காய்ச்சல் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கு மல்காங்கிரி மாவட்டத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை குறிவைத்து தாக்கும் இந்த காய்ச்சலுக்கு இதுவரை 80 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் போல்கண்டா தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கும் உமேஷ் மாதி என்ற சிறுவன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். அதில் தனது கிராமத்தில் பரவி வரும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளான். எங்களைக் காப்பாற்றுங்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் இறந்துவிட்டனர். உலகம் முழுவதும் செல்லும் நீங்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து குழந்தைகளின் நிலையை நேரில் பார்க்க வேண்டும் எனஉருக்கமாக எழுதியுள்ளான்.சிறுவனின் இந்த கடிதத்தைப் பற்றிதான் தற்போது சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications