வேலை தேடி ஜெய்பூர் சென்ற கொல்கத்தா இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் வழியில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளம்பெண் 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்த 22 வயது பெண் வேலை தேடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு கடந்த மாதம் 28ம் தேதி வந்துள்ளார். ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய அவர் அஜ்மீர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டார். இதையடுத்து அவர் கடந்த 30ம் தேதி டாக்சி மூலம் தர்காவுக்கு கிளம்பினார்.
அப்போது 7 முதல் 8 பேர் டாக்சியை வழிமறித்து அந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று ஆள் இல்லாத வீட்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து அவரை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்கி(25) மற்றும் அசோக்(22) ஆகியோரை கைது செய்தனர். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications